மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கொழும்பு, நுவரெலியா மற்றும் பதுளை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகன சாரதிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை காணப்படுகிறது. குறிப்பாக, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அதிக அளவில் வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதிகாரப்பூர்வமாக எரிபொருள் விநியோகத்தில் எந்தவித இடையூறும் இல்லை என சம்பந்தப்பட்ட தரப்புகள் தெரிவித்துள்ளன. மேலும், பொதுமக்கள் தேவைக்கு மீறி எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்பாராத தேவையற்ற குவிப்பு நடவடிக்கைகள் சந்தையில் செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கக்கூடும் என்பதால், எரிபொருளை பொறுப்புடன் பயன்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்

செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.