Breaking News / முக்கிய செய்திகள்:
முகப்பு இலங்கை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இளம்...
இலங்கை
01 March 2026, 6:18 am

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து இளம் யுவதி உயிரிழப்பு..!

T
tharshi tharshathi
2 weeks முன்
புதிய செய்தி

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்துச் சிதறியதில், சமையலில் ஈடுபட்டிருந்த இளம் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் குருநாகல், கல்கமுவை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. கல்கமுவை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

எரிவாயு அடுப்பு அல்லது குழாயில் கசிவு 

நேற்றுப் பகல் தனது வீட்டின் சமையல் அறையில் மதிய உணவைத் தயார் செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எரிவாயு சிலிண்டர் வெடித்துள்ளது.

இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது ஏற்பட்ட கடும் தீக்காயங்கள் காரணமாக அந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் விசாரணை

சமையல் அறையிலுள்ள எரிவாயு அடுப்பு அல்லது குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் சந்தேகிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விரிவான விசாரணைகளைப் பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியின் உண்மைத்தன்மை

இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.