நேற்றுமுன்தினம் (09) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.
இதன்படி 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 317 ரூபாவாகவும் ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் புதிய விலை 365 ரூபாவாகவும் ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 303 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் புதிய விலை 353 ரூபாவாகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 195 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி நேற்றையதினம் ஆற்றிய உரை ஒன்றிலே மத்திய கிழக்கு மோதல்களால் எத்தகைய சவால்கள் ஏற்பட்டாலும், இன்னும் இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிசக்தி கையிருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனினும், எரிபொருள் மற்றும் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.