மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாரிய தாக்கம் ஏற்படலாம் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு உரையாற்றும் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
சுற்றுலாப் பயணிகள்

ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஏனைய நாடுகளிலிருந்தும் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மத்திய கிழக்கு பிராந்தியம் வழியாக வருவதாகவும், அந்தப் பிராந்தியத்தில் தற்போது விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் மூடப்படுவது நாட்டின் சுற்றுலாத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் பிரதி அமைச்சர் கூறினார்.
அதன்படி, சுற்றுலாத் துறையில் ஏற்படும் தாக்கம் வாரத்திற்கு 10 முதல் 12 மில்லியன் டொலர்கள் வரை நிதி இழப்பை ஏற்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியின் உண்மைத்தன்மை
இச்சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.